Showing posts with label SriLan. Show all posts

 


( வி.ரி.சகாதேவராஜா)

முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு  எஞ்சியது கல்வி மாத்திரமே.
இவ்வாறு நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.ரூபசாந்தன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரும் இந்திரன் பௌண்டேசன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான இ.ரூபசாந்தனின் சிந்தனையின் செயற்பாடாய் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் தெளிவூட்டல் செயலமர்வு இன்று (30) செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி வேப்பயடி கலைமகள் வித்தியாலயத்தில்  அதிபர் கே.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்த தவிசாளர் மேலும்  பேசுகையில். 

எம் தமிழினம் முப்பது வருட கால யுத்தத்தினை சந்தித்து உடமைகள் உயிர்கள் பலவற்றை இழந்து ஏதிலிகளாக பல நாடுகளில் வாழ்ந்தாலும் உலக அரங்கிலோ எம் நாட்டிலோ எம்மவர்கள் இழக்காத சொத்து கல்வி மாத்திரமே ஆகவே நாம் எதை இழந்தாலும் கல்வியின் பயனால் அனைத்தையும் தேடிக்கொள்ள முடியும்.

இந்த நாவிதன்வெளி பிரதேசத்திற்கு  மாத்திரமல்ல எனைய பகுதிகளுக்கும் கல்விக்கு நான் சேவை செய்ய ஒரு போதும் தயங்கியதில்லை . கல்வி கற்ற இளம் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாம் தனி மனித ஒழுக்கம், பொருளாதாரம் என்பவற்றை வளர்த்து முன்னேற்றம் அடைந்த சமூகத்தை உருவாக்கலாம் என தெரிவித்தார்.

இந்த மாதிரி வினாத்தாள் தெளிவூட்டல் செயலமர்வினை வளவாளர் வி. தயாநிதி ஆசிரியரினால் சிறப்பாக நாடாத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் கலைமகள் வித்தியாலய அதிபர் கே.தியாகராஜா ஆசிரியர்கள் ,பரீட்சைக்கு தோற்றவிருக்கும் நாவிதன்வெளி கோட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.


 ( வி.ரி. சகாதேவராஜா)


நீதிக்கான சுழற்சி முறையிலான உண கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக  (27) சனிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (29) திங்கட்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்தது.

பலர் சோர்ந்து காணப்பட்டனர். இன்னும் பலர் அழுதழுது சாட்சியம் அளித்தனர்.


வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இப் போராட்டம் ஆரம்பித்தது.

இப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மட்டக்களப்பு மாவட்ட  அமல்ராஜ் அமலநாயகி மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட நூற்றுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு 26,27,28.09.2025 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

அக்கட்சியின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ் அமீர் அலி மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இச்செயலமர்வின் வளவாளர்களாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. ஐங்கரன் மற்றும் விவசாய அமைச்சின் பிரதான கணக்காளர் திரு. உதய ராஜன் ஆகியோர் தொழிற்பட்டருந்தனர்.

முதலாவது நாள் செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் நிதி சார் நடைமுறைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்செயலமர்வில் இலங்கை பூராகவும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சிரேஷ்ட பேராசிரியர் முசாதிக்.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் அவர்கள், 2024 நவம்பர் 1ஆம் திகதி முதல் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த பதவி உயர்வின் மூலம், அவர் இலங்கையில் பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் கல்வியாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.



எந்திரவியல் பொறியியல் துறையில் சிறப்பாக பணி ஆற்றும் பேராசிரியர் முஸாதிக் அவர்கள், பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி, நிர்வாகப் பொறுப்புகள் உள்ளிட்ட துறைகளில் தனது பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட பல்தரப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகள், சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்புகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் இவரது கல்வி சார் பயணத்தை சிறப்பாக மாற்றியுள்ளன.“இலங்கையில் முஸ்லிம் சமூகத்திலிருந்து பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைவது இதுவே முதல்முறையாகும். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வு” என கல்வி வட்டாரங்கள் பாராட்டின.

இந்த சாதனைக்காக பேராசிரியர் முஸாதிக் அவர்களுக்கு கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தினர் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. “இது அவரது அசைக்க முடியாத உழைப்பிற்கும் கல்விசார் அர்ப்பணிப்பிற்கு மான சான்றாகு ம். எதிர்கால கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் மேலும் உயரங்களை எட்டுவாராக” என தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


 யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தயாரும் நேற்று (26) உயிரிழந்துள்ளார்.


கடந்த 21ஆம் திகதி குழந்தைகளின் தாய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டமையால், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதோடு, அறுவை சிகிச்சை வாயிலாக ஆண் குழந்தையொன்றையும் பெண் குழந்தையொன்றையும் பிரசவித்தார். 


இதன்போது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே பிறந்ததோடு, பெண் குழந்தையும் பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.


இந்நிலையில் தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.


அவரது சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. 


சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்கப்படுத்தினர். ஆனால், மரணத்துக்கான காரணம் உறுதியாகாததால் உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. 


ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த சாருமதி எனும் 28 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். 


 



மேல் நீதிமன்றுக்கு  அண்மையில்  இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் சித்மியடைந்தவர்களுக்கான நியமனம்  எதிர்வரும் புதன் கிழமையன்று இடம்பெறும் என்பதாகத் தெரியவருகின்றது. 

இம் முறை வட கிழக்கைச் சேர்ந்த  5 பேர், புதிதாக மேல் நீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கௌரவ நீதிபதிகளான றியாழ் சேர், றிஸ்வி சேர், கஜநிதிபாலன் சேர், ஜீட்சன் சேர், வளன் சேர் ஆகியோருக்கு 



 ( வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை  தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை "ஒஸ்கார்" அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை வெல்லுங்கள்.

இவ்வாறு அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலிய "ஒஸ்கார்" பிரதிநிதி தம்பியப்பா கணேசநாதன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய வீரச்சோலை  தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின் ( ராஜன்) வழிநடத்தலில்,  உபதலைவர், பிரபல கட்டடக் கலைஞர் அ.மகேந்திரன் ஒழுங்கமைப்பில், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேடமாக கலந்து கொண்ட "ஒஸ்கார்" அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் தம்பியப்பா கணேசநாதன்  இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி நல்கினார்.

இந்நிகழ்வு ,  வீரச்சோலை  தமிழ் மகாவித்தியாலயத்தில்   நேற்று ( 26)   செவ்வாய்க்கிழமை  அதிபர் ஆ.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக,  ஒஸ்கார் அமைப்பின் இலங்கைக்கான செயற்பாட்டுக்குழுத் தலைவர், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.
சிறப்பதிதியாக ஒஸ்கார் பிரதிநிதி காரைதீவு அனைத்து ஆலயங்களின் அறங்காவலர் ஒன்றியத் தலைவர் இரா.குணசிங்கம் கலந்துசிறப்பித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்.
இளமையில் வறுமை என்னவென்பதை நான் அறிவேன். எனவே இத்தகைய மிகவும் பின்தங்கிய பகுதியில் கல்விகற்கும் உங்களுக்கு என்னாலான முழு உதவியையும் செய்வேன் . கபொத. சா.தர மாணவர்கள் சிறப்பு சித்தி பெற்றால் பெறுமதியான புலமைப் பரிசில் வழங்கப்படும். அதேபோல் ஏனைய மாணவர்கள் பாடங்களில் 100 புள்ளிகளை பெறுகின்றபோதும் புலமைப் பரிசில் வழங்கப்படும்.இங்கு சிரமத்திற்கு மத்தியில் வந்து கற்பிக்கின்ற அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன். என்றார்.

நிகழ்வில் 50 மாணவர்களுக்கு பாடசாலை பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

"ஒஸ்கார்"  அமைப்பினர்  கடந்த 15 வருடங்களாக இன்னொரன்ன பல  சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல்,  அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில்  செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதத்தில் இதுவரை திராய்க்கேணி, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி, வீரச்சோலை ஆகிய பாடசாலைகளில் கற்றல் உதவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய குடியிருப்புமுனை சண்முகா பாடசாலைக்கும் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) தெரிவித்தார்.

இவ் வருடம் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் மேலும் பெருமளவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ராஜன் மேலும் தெரிவித்தார்.

 


நடந்தது என்ன 

முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்..

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.

இப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் 17.03.2025 அன்று ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் 23.05.2025 அன்று ஜனாதிபதியின் செயலாளரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 13.09.2023 முதல் 20.09.2023 வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பின்னர், 22 மற்றும் 23.09.2023 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.

நீண்ட விசாரணைகளின் போது அரசாங்க தரப்பு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக ரணிலுக்கான பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட #தனியார் வெளிநாட்டுப் பயணத்திற்காக, அரசாங்கத்தின் 166  லட்சம்  ரூபாய் நிதியை #முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி  Ranil Wickremesinghe வை, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் திகதி வரை #விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுர இன்று உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிப்பது அல்லது தடுத்து வைப்பது தொடர்பான முடிவு நிலுவையில் உள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக மூத்த அரச வழக்கறிஞர் திலீப பீரிஸ் ஆஜரானார், அதே நேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தினார் ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜ பிரேமரத்ன.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


எனினும், முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது - இலங்கை வரலாற்றில் முதன்முறை; என்ன காரணம்?


இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.


ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.


தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.


இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது.


இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


முதல் சந்தர்ப்பம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கையில் 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமே தற்போது நாட்டில் அமலில் உள்ளது.


இந்த அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு அதிவுயர் அதிகாரமான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.


ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னர் தற்போது அநுர குமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.


இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.


சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாபட மூலாதாரம்,PRADEEPA MAHANAMAHEWA

படக்குறிப்பு,சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா?

முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது.


''ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.


எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார்.


''ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது." என அவர் தெரிவித்தார்.


அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிணை அவருக்கு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.


"அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.'' எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 


பாறுக் ஷிஹான்


தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டி (Career Guidance Unit) பிரிவின் ஏற்பாட்டில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன், தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாட்   வழிகாட்டலிலும், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிப்லி எவ்.எச்.ஏ.   நெறிப்படுத்தலிலும், “இந்தியாவில் உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்த சிறப்பு செயலமர்வு இன்று  பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் Swami Vivekananda Cultural Centre (ICCR) பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குரன் தத்தா கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயனுள்ள உரையை வழங்கினார்.

தனது உரையில் அவர், இலங்கைக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்து, தேயிலைத் தொழிலின் வளர்ச்சி, பன்முக கலாச்சார ஒற்றுமை போன்றவற்றை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மேலும்,“India is the second-largest education hub in the world after the United States. We have nearly 1,200 universities comprising central universities, state universities and private universities. In addition, there are more than 50,000 affiliated colleges across the country. Every year ICCR offers around 5,000 fully funded scholarships to foreign students. Out of this, 200 scholarships are exclusively allocated to Sri Lankan students covering undergraduate, postgraduate and PhD studies,” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், இந்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நடைமுறை, விண்ணப்பிக்கும் முறை, A2A Portal வழியாக ஆவணங்களை சமர்ப்பிக்கும் செயல்முறை உள்ளிட்டவை பற்றி விரிவாக விளக்கினார்.

 “விமான டிக்கெட், தங்குமிடம், கல்விக் கட்டணம், மாதாந்திர உதவித்தொகை என அனைத்தையும் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மாணவர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது” என வலியுறுத்தினார். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், IITs, IIMs, Indian Institute of Science போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை எடுத்துக்காட்டினார்.
மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் அரபி, பாரசீக, இஸ்லாமியக் கல்வி துறைகள் தனித்துவமாக இயங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“India is very colorful, very multicultural, and at the same time, an IT hub of the world. With more than 22 officially recognized languages and nearly 19,500 dialects, India stands as one of the most diverse nations in the world,” என இந்தியாவின் பல்வகை தன்மையை வலியுறுத்தினார்.

இந்த செயலமர்வில், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். றாசிக், விரிவுரையாளர் எம்.எஸ். சனூமி, தொழில் வழிகாட்டி பிரிவின் ஆலோசகர் எல்.ரீ.எம். இயாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் பங்கேற்றனர்.
செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்வி–பதில் அமர்வில் கலந்து கொண்டு, இந்திய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த தெளிவான புரிதலை பெற்றனர்.

 


நூருல் ஹுதா உமர்

வாகரை பிரதேசத்தில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சமூக ஆர்வலர்களும், பாடசாலை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எதிர்வரும் காலங்களில் கல்விப் பொது சாதாரண தரத்தில் பரீட்சை எழுதும் பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், கட்டுமுறிவு வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் மேலதிக வகுப்பு ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் த.உதயகுமார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆயித்தியமலை பாடசாலையின் அதிபர் து.வித்தியானந்தன், கட்டுமுறிவு பாடசாலையின் அதிபர் ஜீ.ஜீவனேஸ்வரன், ஆசிரியர் க.நாகேந்திரன், மேலதிக வகுப்பில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான துலக்சன், ஜெயக்காந், காந்தன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் இரண்டாவது அமர்வு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று 14.08.2025 பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்த அமர்வில் முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் காணாமல் போன நிலையில் முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் கபில்ராஜ் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிரதேச சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையில் 80% மாத்திரமே மீள் நிரப்பல் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றது. மிகுதியான 20% தொகையானது சபை நிதி மூலம் வழங்கப்பட்டு வருவதால் மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசினால் வழங்கப்படும் மீள் நிரப்பல் தொகையை 100% ஆக வழங்குவதற்கு அரசினை கோருவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை அனுமதி வழங்கியது.

மேலும் வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக தொலைபேசி பாவனைக்கு மாதாந்தம் தவிசாளர் (2500/-), உபதவிசாளர்(1500/-), உறுப்பினர்களுக்கு மாதாந்தம் (1000/-), எனும் உச்ச தொகை வழங்க சபை அனுமதி வழங்கியதுடன் பிரதேச சபையின் வாகனத்தை தவிசாளர் அலுவலக நோக்கத்திற்கு பயன்படுத்தும் போது மாதமொன்றுக்கு பயன்படுத்தும் எரிபொருள் அளவை (லீற்றரில்) தீர்மானித்து சபை அனுமதி வழங்கியது.

உபசரணைச் செலவுக்கும், அலுவலகத்திற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியதுடன் பிரதேச சபை ஊழியர்களுக்கு இடர்கடனாக ஒவ்வொருவருக்கும் ரூ.100,000.00 தொகையினை வழங்க தவிசாளர் முன்வைத்த பிரேரணைக்கு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததுடன் தொகையை சபையின் வருமானத்தை கொண்டு அதிகரிப்பது தொடர்பில் உறுப்பினர்களிடம் வாதப்பிரதி வாதங்கள் எழுந்தது.

இதன்போது மாவடிப்பள்ளி கிராமத்திற்கு சிறுவர் பூங்கா ஒன்றை அமைக்குமாறு, அதற்கான காணி கிராம சேவை உத்தியோகத்தரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 29.07.20250 நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட காணியினை குறித்த வட்டார கௌரவ உறுப்பினர்களுடன் பார்வையிட்டு பெற்றுக்கொள்வதற்கான தொடர் மேற்கொள்ள சபை அனுமதி கோரப்பட்ட போது மாவடிப்பள்ளியை சேர்ந்த இரு உறுப்பினர்களும் காணி பெறுவதில் உள்ள விடயங்களை சபைக்கு முன்வைத்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினருமான கி. ஜெயசிறில் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நடைபெற்ற அநியாயங்கள் தொடர்பில் சபையில் விசேட உரையாற்றி எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு மலையக தலைவர்கள் ஆதரவு தந்தது போன்று எங்களுடன் இணைக்க அரசியல் அரசியல் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 


பாறுக் ஷிஹான்


கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னரங்கு சேவை பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து இன்று (11)  வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார்  தலைமையில் நடைபெற்றதுடன்   பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

Smile desk டிஜிடல் சேவை திறந்த வைக்கும் நிகழ்வில் முதலில் இறைவணக்கம்  உட்பட தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் நிகழ்வில்  வரவேற்பு உரை மற்றும் தலைமை உரையினை  கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் மேற்கொண்டார்.

Smile desk  டிஜிடல்  சேவை தொடர்பான அறிமுக நிகழ்வை அபிவிருத்தி உத்தியோகத்தர் அகாஸ் மற்றும் தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர் பர்கானா ஆகியொர் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் யு.எல்.மஹ்ரூப் ,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்  செயலாளராக இருந்து ஒய்வு பெற்ற  எம்.எம். நஸீர்,பிரதேச செயலக  நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , சமூர்த்தி தலைமை பீட  சிரேஷ்ட முகாமையாளர், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இறுதியாக நன்றியுரையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கலாச்சார நிதி திட்டங்களுக்கு இலவச அணுகலை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


மத்திய கலாச்சார நிதி ஆளுநர்கள் சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


உள்ளூர் சிறுவர்களிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை உருவாக்குவதும், தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முக்கிய நோக்கம் என்று துணை அமைச்சர் கமகெதர திசாநாயக்க கூறுகிறார்.


அதன்படி, சிகிரியா, யாபஹுவ மற்றும் தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்தின் மதிப்புள்ள 26 தொல்பொருள் இடங்களை நுழைவுச் சீட்டுகள் இல்லாமல் பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


இதற்கு இணையாக, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு சிறுவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்

 


தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (05) நடைபெறவுள்ளது.


அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடும்.


தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர்பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (05) பிற்பகல் நடைபெற உள்ளது.


தவறான நடத்தையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, 115 பாராளுமன்ற ஊறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தென்னகோன் குற்றவாளி என்று ஒருமனதாக முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றைய தினம்(02) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் .

 

நுவரெலியாவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் பெருமாள் ராஜதுரை, இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராளய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள்

 

குறிப்பாக இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.

 

அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

 

அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தினை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க, மிக விரைவில் வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்ய முயற்சிப்பதோடு, மேலதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரால் தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை(வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதோடு, அத்திட்டத்தினை மேலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறும் இ.தொ.கா வினால் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கான புதிய கட்டிடம் ஒன்றை இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிப்பதற்கான திட்டம் ஒன்று இருப்பதாகவும், வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிர் தெரிவித்தார்.

 

அதேபோல் இந்திய அரசின் புலைமைத் திட்டத்தினூடாக மிகவும் குறைந்தளவிலான மலையக மாணவர்களே உள்வாங்கப்படுவதனால், எதிர் காலத்தில் மலையக மாணவர்களுக்கு என்று இந்திய துனைத் தூதரகத்தினூடாக இந்திய அரசின் புலைமைத்திட்டம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கு இனங்க, இது தொடர்பாக விரைவில் மலையகத்திற்கு என்று புதியதொரு புலைமை திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அதேவேலை இதனூடாக அதிகப்படியான மலையக மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று கருத்து பரிமாறப்பட்டது.

 

மேலும் மலையகத்திற்கான இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதனை இந்தியா விரும்புவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

 

புதிதாக தெரிவுசெய்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவின் அஹமதாபத்தில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் இ.தொ.கா சார்பில் 20 உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இனங்க அதற்காக பதிலையும் விரைவில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

 

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளான உங்களை சந்தித்தமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், பெருமைக்கொள்வதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துக்கொண்டார்.

 




கொஸ்கொட, தூவமோதரவில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் 23 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் .


இது தொடர்பில் கொஸ்கொட பொலிஸ் விசரணைகளை ஆரம்பித்துள்ளது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.