முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு எஞ்சியது கல்வி மாத்திரமே-
( வி.ரி.சகாதேவராஜா)
( வி.ரி.சகாதேவராஜா)
( வி.ரி. சகாதேவராஜா)
நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சிரேஷ்ட பேராசிரியர் முசாதிக்.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் அவர்கள், 2024 நவம்பர் 1ஆம் திகதி முதல் சிரேஷ்ட பேராசிரியராக (Senior Professor) பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த பதவி உயர்வின் மூலம், அவர் இலங்கையில் பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் கல்வியாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி குழந்தைகளின் தாய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டமையால், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதோடு, அறுவை சிகிச்சை வாயிலாக ஆண் குழந்தையொன்றையும் பெண் குழந்தையொன்றையும் பிரசவித்தார்.
இதன்போது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே பிறந்ததோடு, பெண் குழந்தையும் பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்கப்படுத்தினர். ஆனால், மரணத்துக்கான காரணம் உறுதியாகாததால் உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த சாருமதி எனும் 28 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேல் நீதிமன்றுக்கு அண்மையில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் சித்மியடைந்தவர்களுக்கான நியமனம் எதிர்வரும் புதன் கிழமையன்று இடம்பெறும் என்பதாகத் தெரியவருகின்றது.
இம் முறை வட கிழக்கைச் சேர்ந்த 5 பேர், புதிதாக மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கௌரவ நீதிபதிகளான றியாழ் சேர், றிஸ்வி சேர், கஜநிதிபாலன் சேர், ஜீட்சன் சேர், வளன் சேர் ஆகியோருக்கு
( வி.ரி. சகாதேவராஜா)
எனினும், முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது - இலங்கை வரலாற்றில் முதன்முறை; என்ன காரணம்?
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது.
இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
முதல் சந்தர்ப்பம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமே தற்போது நாட்டில் அமலில் உள்ளது.
இந்த அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு அதிவுயர் அதிகாரமான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னர் தற்போது அநுர குமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாபட மூலாதாரம்,PRADEEPA MAHANAMAHEWA
படக்குறிப்பு,சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா
முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா?
முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது.
''ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.
எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார்.
''ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது." என அவர் தெரிவித்தார்.
அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிணை அவருக்கு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.
"அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.'' எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பாறுக் ஷிஹான்
நூருல் ஹுதா உமர்
பாறுக் ஷிஹான்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கலாச்சார நிதி திட்டங்களுக்கு இலவச அணுகலை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய கலாச்சார நிதி ஆளுநர்கள் சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் சிறுவர்களிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை உருவாக்குவதும், தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முக்கிய நோக்கம் என்று துணை அமைச்சர் கமகெதர திசாநாயக்க கூறுகிறார்.
அதன்படி, சிகிரியா, யாபஹுவ மற்றும் தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்தின் மதிப்புள்ள 26 தொல்பொருள் இடங்களை நுழைவுச் சீட்டுகள் இல்லாமல் பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கு இணையாக, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு சிறுவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்
அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றம் கூடும்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர்பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (05) பிற்பகல் நடைபெற உள்ளது.
தவறான நடத்தையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, 115 பாராளுமன்ற ஊறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தென்னகோன் குற்றவாளி என்று ஒருமனதாக முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்றைய தினம்(02) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் .
நுவரெலியாவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் பெருமாள் ராஜதுரை, இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராளய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள்
குறிப்பாக இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தினை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க, மிக விரைவில் வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்ய முயற்சிப்பதோடு, மேலதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை(வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டதோடு, அத்திட்டத்தினை மேலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறும் இ.தொ.கா வினால் கோரிக்கை வைக்கப்பட்டது.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கான புதிய கட்டிடம் ஒன்றை இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிப்பதற்கான திட்டம் ஒன்று இருப்பதாகவும், வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிர் தெரிவித்தார்.
அதேபோல் இந்திய அரசின் புலைமைத் திட்டத்தினூடாக மிகவும் குறைந்தளவிலான மலையக மாணவர்களே உள்வாங்கப்படுவதனால், எதிர் காலத்தில் மலையக மாணவர்களுக்கு என்று இந்திய துனைத் தூதரகத்தினூடாக இந்திய அரசின் புலைமைத்திட்டம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கு இனங்க, இது தொடர்பாக விரைவில் மலையகத்திற்கு என்று புதியதொரு புலைமை திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அதேவேலை இதனூடாக அதிகப்படியான மலையக மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று கருத்து பரிமாறப்பட்டது.
மேலும் மலையகத்திற்கான இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதனை இந்தியா விரும்புவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
புதிதாக தெரிவுசெய்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவின் அஹமதாபத்தில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் இ.தொ.கா சார்பில் 20 உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இனங்க அதற்காக பதிலையும் விரைவில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளான உங்களை சந்தித்தமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், பெருமைக்கொள்வதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துக்கொண்டார்.