Showing posts with label Akkaraipatttu. Show all posts

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

 21ஆம் திகதி இடம்பெறும் அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் கட்சி தலைமையினால் எடுக்கப்படவில்லை. இருப்பினும் கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு செயற்படுவோம் என என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் தெரிவித்தார்.
பொத்துவில் கோமாரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம் பெற்ற அம்பாரை மாவட்ட ஊடகவியலயாளர் போரத்தின் கூட்டமொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட மலையக மக்களுக்கான சம்பள உயர்வை வரவேற்றுகின்றோம். இன்னும் அதிகமாக வழங்குவதில் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்களுக்கான உரிமை மற்றும் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எனும் ரீதியில் எனது கோரிக்கையாகவும் இருக்கின்றது
இதேநேரம் மலையகத்தில் உள்ள 5 தனியார் தோட்டக்கம்பனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரச நிதியில் இருந்து சம்பள அதிகரிப்பை வழங்க முடியுமா எனும் கேள்வி எழுந்தமைதான் அங்கு சர்சையாக எழுந்துள்ளது. ஆனாலும் அவர்களது சம்பள உயர்வு வீட்டு வசதி சுகாதார வசதி வழங்கப்பட்டால் அதனை நாம் வரவேற்பதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்போம்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலயாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற ஒன்று கூடலில் கலந்து கொண்ட அவர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினரும் ஊடகவியலாளரும் பிரதான சுகாதாரப்பரிசோதகராக 35 வருடத்திற்கும் மேல் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற அப்துல் மலீக் அவர்களுக்கு; நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இதேநேரம் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் முன்னின்று செயற்படவுள்ளதாகவும் உறுதி அளித்தார்.
நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

 


அக்கரைப்பற்று -கல்முனை  பிரதான வீதியில் இன்று மாலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பிரதான வீதியில் பின்னால் வந்த கென்ரர் ரக வாகனம் முன்னால் சென்ற வேனில் பின் பகுதியில் மோதியது. தெய்வாதீனமாக அதிலிருந்த குழந்தையும் பெண்ணும் உயிர் தப்பினர். குறித்த வேன், தனக்கு முன் எதிரே சென்ற  வெசல் ரக காரில் மோதுண்டது. இதனால், குறித்த காரின் பின் பகுதியும் சேதமடைந்தது.






நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


இன்று (21) பாராளுமன்றத்தில் எழுப்புய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகக் கூறினார். 

மேல் மாகாணத்தில் 4,630, தென் மாகாணத்தில் 2,513, மத்திய மாகாணத்தில் 6,318, வடமேல் மாகாணத்தில் 2,990, ஊவா மாகாணத்தில் 2,780, வடமத்திய மாகாணத்தில் 1,568, கிழக்கு மாகாணத்தில் 6,613, சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 மற்றும் வடக்கு மாகாணத்தில் 3,271 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

இதற்காக, நாடு முழுவதும் உள்ள தேசியப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் மற்றும் 13 ஆண்டு தொடர்ச்சியான பாடங்களுடன், க.பொ.த உயர்தர சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல வெற்றிடங்களுக்காக 28.07.2024 முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. 

ஆசிரியர் சேவையின் தரம் 3 (ஆ) 1 தரத்தை சேர்ந்த பொறுப்பேற்காத 353 பட்டதாரிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். 

மேலும், ஆசிரியர் சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்ப பிரதமரின் செயலாளரின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அந்த வெற்றிடங்களை விரைவில் நிரப்ப தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


இச் சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு  தனது பிறந்த நாளில்  50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய  இளம் தொழிலதிபர்


பாறுக் ஷிஹான்


9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர்  சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு  பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தார்.



புதன்கிழமை(15) இரவு கல்முனை மாப்பிள்ளை விருந்து தனியார் விடுதியில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  லசந்த களு ஆராய்ச்சி  முன்னிலையில்  இக்காசோலை குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.


பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிக்கமைய இத்திட்டம் அவரது பிறந்த நாளான அன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்  இன்னும் ஆறு வருடங்களுக்கு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


குறித்த மாணவி அம்பாறை மாவட்டம் கல்மனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா   மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2024ம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி 9 ஏ சித்திகளை பெற்றவராவார்.


மேலும் குறித்த பாடசாலையில்   க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி ஒவ்வொரு வருடமும் 9 ஏ சித்தி பெறும் மாணவருக்கு 50 ஆயிரம் ரூபா பணப் பரிசு வழங்குவதாக எம்.எச்.கே.மார்க்கட்டிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் வாக்குறுதியளித்திருந்தார்.


குறித்த வாக்குறுதிக்கமைய 2024ம் ஆண்டில் நடைபெற்ற பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவி மெளலவி முகம்மது  நிஸ்பர் (ஹாமி) ஆசிரியரின்  புதல்வி பாத்திமா அனபா என்பவரிற்கு தனது பிறந்த நாளான அன்று  தான் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் மற்றும் ஆசிரியர்கள்  ஊடகவியலாளர்கள் உட்பட  மேலும் பலர் கலந்து கொண்டனர்.


மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியிலும்  முன்னேற்றத்திலும் இவ்வாறான உந்து சக்தியான வார்த்தைகள் இளம் சமூகத்தின் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை என  பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் தெரிவித்தார்.


இத்திட்டம் 10 வருடங்களுக்கு செயற்படுத்தப்படும் திட்டம் என்பதுடன்   பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித்தினால்  வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில்  அவரது பிறந்த நாளில்  இடம்பற்ற நிகழ்வு நான்காவது வருடத்திற்குரியது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 



யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை , கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும், பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


 இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.


இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நெடுந்தீவு வாழ் மக்கள் கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.


தற்போது, தீவகத்தில் உள்ள மின்பிறப்பாக்கிக்கு எரிபொருளை கொண்டு செல்ல சுமார் ஏழு மணிநேரம் எடுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் செயற்படத் தொடங்கியவுடன், 45 நிமிடங்களுக்குள் எரிபொருளை வழங்கக்கூடிய வசதி கிடைக்குமெனவும் இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக பூர்த்தி செய்யப்படும் என்றும், முதல் கட்டத்திற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 50 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யுமென்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு உறுதியளிக்கும் அரசாங்கத்தின் கீழான ஒருங்கிணைந்த முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை இந்த வளர்ச்சி குறிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். நயினாதீவு அம்மன் கோவில் வரை மக்கள் சமாதானமாகவும் ஒரே படகிலும் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய ஒரு காலத்தை இந்த நிர்வாகம் உருவாக்கியுள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 


வி.சுகிர்தகுமார் 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைய உலக குடியிருப்பாளர் வாரத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் 1000 வீடுகள் இன்று (05)திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 4 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஆலோசனைக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ் மற்றும் இணைப்பு செயலாளர் எஸ்.எம்.ஆரிப் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ரதீஸ் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 10 இலட்சம் ஒதுக்கீடு மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிர்மாணக்கப்பட்ட பெறுதிமிக்க 4 வீடுகள் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.
திறப்பு விழாவின் பின்னர் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் குறித்த வீடமைப்பிற்காக உதவியினை புரிந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்ததுடன் இதுபோன்ற வீடற்ற மக்கள் இன்னும் வாழும் பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்காலத்திலும் வீட்டுத்திட்டங்களை வழங்கி ஏழை மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் இவ்வீட்டுத்திட்டத்தினை வழங்கிய அரசுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
இதன்போது வீட்டினை பெற்றுக்கொண்ட பயனாளி ஒருவரால் பிரதேச செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பு நிகழ்வாக அமைந்தது.



நூருல் ஹுதா உமர்

"எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு" என்ற நிகழ்ச்சி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தலைமையில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மேல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜே. ட்ரோஸ்கி, சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி. ராமகமலன், முன்னாள் மாவட்ட நீதிபதி மற்றும் தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஏ.எம்.எம்.றியாழ், மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் மாண்புமிகு எம்.எஸ்.எம். சம்சுதீன் ஆகியோருக்கு பிரியாவிடை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஆண்டனி பிள்ளை ஜூட்சன், மாவட்ட நீதிபதி மாண்புமிகு டி. கருணாகரன் மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் மாண்புமிகு கே.எல்.எம். சாஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் நால்வருக்கு விடை கொடுக்கும் நிகழ்வை நடத்துவது கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் இதுவரை நடைபெறாத சிறப்பாகும்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



 13 ஆவது மகளிர் உலகக் கிண்ண போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2ஆம் திகதி வரை இந்தியாவின் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது. 


இதில் இந்தியா, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கும் தொடக்க போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீராங்கனைகளும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.



இந்திய அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர், சினே ராணா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரனி, ராதா யாதவ்.


இலங்கை: சமாரி அத்தபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹரி, இமிஷா துலானி, விஷ்மி குணரத்ன, அச்சினி குலசூர்ய, சுகந்திகா குமாரி, மால்கி மதர, ஹாசினி பெரேரா, வத்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரனவீர, ஹர்ஷிகா சமரவிக்ரமா, நிலக்ஷிகா சில்வா, தேமி விஹாங்க.


இன்று பிற்பகல் 3 மணியளவில் இப்போட்டி தொடங்கவுள்ளது  

 


#இளம்_விஞ்ஞானக் #கண்டுபிடிப்பாளர்களுக்கான_தேசிய #விழாவிற்கு_அக்கரைப்பற்று_முஸ்லிம் #மத்திய_கல்லூரி_தெரிவு!!!


#முழு_இலங்கையிலும்_இருந்து_தெரிவு #செய்யப்பட்ட 100 #பாடசாலைகளில் #இடம்பிடித்து_கௌரவம்_பெற்றது #அக்கரைப்பற்று_முஸ்லிம்_மத்திய_கல்லூரி


எமது அக்கரைப்பற்றுவாழ்த்துக்கள் முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் இளம் புத்தாக்குனர் கழகம் (Young Inventors Club) #தேசிய_ரீதியில் 100 #பாடசாலைகளில் #புத்தாக்குனர்_கழகங்களை_ஆரம்பித்தல் எனும் தொனிப்பொருளிலான தேசிய விழாவிற்கு தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வானது கடந்த 08/09/2025 இல் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட கேட்போர் கூடத்தில் எமது நாட்டின் பிரதமர் கௌரவ Dr.#ஹரினி #அமர_சூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் எமது பாடசாலை சார்பாக N.#அப்தால் #அகமட்,T.#வலீத்,AH.#ஹஸன்_ரஷீத் ஆகிய மாணவர்கள் பிரதமரினால் சின்னம் சூட்டி கௌரவிப்பட்டதுடன் புத்தாக்க கழக பெயர்ப் பதாகையும் வழங்கி வைக்கப்பட்டது.


எமது கல்லூரிக்கு தேசிய ரீதியில் கீர்த்தியைப் பெற்றுத்தந்த இளம் புத்தாக்குனர் கழகத்தையும் அதனை சிறப்பாக செயற்படுத்த உதவிய அதிபர் AL.#நஸீபா_இக்பால்-SLPS மற்றும் பிரதி அதிபர் MA.#ஸலாகுதீன்-SLPS அவர்களுக்கும் செயலாளர் ALM.#நவாஸ் ஆசிரியர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய I.#அப்ரோஜ்_கானம் ஆசிரியை அவர்களுக்கும் பயிற்சி ஆசிரியர் #மிஹாத் #ஸெய்னூதீன் அவர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்ற IM.#பர்ஸான் ஆசிரியர் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும், எமது பாடசாலையில் இளம் புத்தாக்குனர் கழகத்தை (Young Inventors Club) ஸ்தாபித்து அதனை நெறிப்படுத்தி வெற்றிகரமாக பயணிக்கச் செய்த எமது கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும் தற்போதைய கல்வி நிர்வாக சேவை அதிகாரியுமான லெப்டினன் NM.#முஹமட் #ஸாலிஹ்-SLEAS அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.