Showing posts with label Akkaraipatttu. Show all posts



 டுபாய் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரை நிறுத்தம் 


 


இரண்டாவது ஈரானிய கப்பலில் இருந்து மொத்தம் 204 பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர்கள் வெலிசரா கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இலங்கை கடற்படை.

அக்கரைப்பற்றில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் செயலணி முன்னேற்ற ஆய்வு கூட்டம்

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர பிரதேசத்தில் வீதிகளில் வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் செயலணியின் செயற்திட்ட முன்னேற்றங்களை ஆய்வு செய்யும் விசேட கூட்டம், 26.02.2026 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு முதல்வரின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இடம்பெற்றது. செயலணி உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்; பாடசாலைகள் அமைந்துள்ள எல்லைப் பகுதிகளில், பள்ளி ஆரம்பிக்கும் மற்றும் கலையும் நேரங்களில் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உட் செல்லாமல் தடுக்கும் வகையில் சாலை தடுப்புகள் (Road Barriers) அமைத்தல், மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பராமரிப்பில் உள்ள வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதித்தல். மேலும், உள்ளக வீதிகளில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேகத்தை குறிப்பிடும் விளம்பரப் பலகைகள் நிறுவுதல்.

நாற்சந்திகள், பெரிய வளைவுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு கண்ணாடிகள் பொருத்துதல், விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் பொருத்தமான இடங்களில் நிறுவுதல், போக்குவரத்து ஒழுங்கு தொடர்பாக ஜும்ஆ பிரசங்கங்கள், ஒலிபெருக்கி மூலம் வீதி பிரச்சாரங்கள், பாடசாலை மற்றும் மதரஸா மாணவர்களுக்கு காலைக்கூட்டம் மற்றும் வகுப்பறைகளில் விழிப்புணர்வு அறிவுரை வழங்குதல். மேலும் பத்திரிகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தல்.

இந்த நடவடிக்கைகள் மூலம் அக்கரைப்பற்று மாநகரப் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் வீதி  பாதுகாப்பு நிலையை மேம்படுத்த முடியும் என முதல்வர் தெரிவித்தார். செயலணி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விரைவான செயல்பாட்டை உறுதி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564

 


கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் ( (Shotokan Karate Federation - Eastern Province) ) ஏற்பாட்டில், உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் குறித்த விசேட வழிகாட்டல் கருத்தரங்கு அன்மையில் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது

கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் தலைவர் ஷிஹான் கே. கேந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் மு. குககுமாரராஜா  மற்றும் பொருளாளர் வஹாப்தீன் மற்றும் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
'நடுவர்கள் மற்றும் வீரர்களுக்கான உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) 2026 ம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் சம்பந்தமான
இந்தக் கருத்தரங்கை இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் (SLKF) நடுவர் குழுவின் முன்னாள் தலைவரான ஷிஹான் சு. து. அலெக்சாண்டர்  வழிநடத்தினார்.
அவர் 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைப் புத்தகத்தில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 19 கராத்தே கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 145 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடுவர்களின் தீர்ப்பு வழங்கும் திறனை மேம்படுத்தவும், புதிய விதிகளுக்கு அமைய வீரர்களைப் பயிற்றுவிக்கவும் இந்த அமர்வு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
கிழக்கு மாகாண கராத்தே துறையின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, பங்குபற்றிய அனைவருக்கும் ஒரு பயனுள்ள அனுபவமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.



(வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த H.N.D. in English பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகள், தங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து,  தமக்கு நியமனம் வழங்க கோரி அமைச்சரிடம் அதிகாரப்பூர்வ மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒன்றிய தலைவர் கணேசராஜா கேதிக்ஷன் அது தொடர்பான மகஜரை, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறித்த பாடநெறியில் கல்வி பயின்ற மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்களையும் பயிற்சிகளையும் முழுமையாக நிறைவு செய்து, 2024 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றுள்ளனர். எனினும், நிர்வாக தாமதங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவர்களுக்கு இதுவரை அரசாங்க நியமனம் வழங்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசு ஆங்கில ஆசிரியர் விண்ணப்பங்களை கோரி கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024  இல் போட்டி பரீட்சை வைத்து ஒரு தொகுதியினருக்கு நியமனம் வழங்கியது. பின்னர் பட்டதாரிகளுக்கு மாத்திரம் 2024  இல் நியமனம் வழங்கியது .

இவற்றில் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.

நீண்டகாலமாக கல்வி பயின்று தகுதி பெற்றுள்ள டிப்ளோமா பட்டதாரிகள் நாம் வேலைவாய்ப்பு இன்றி இருப்பது அவர்களின் பொருளாதார நிலைமைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வயது ஏறி வருவதாகவும்,குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், நாட்டின் கல்வித்துறையில் ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கான தேவைகள் அதிகரித்து வரும் இந்நிலையில், தங்களது தகுதிகளை பயனுள்ளதாக பயன்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பயின்று தகுதி பெற்றுள்ள டிப்ளோமா பட்டதாரிகள் நாம் வேலைவாய்ப்பு இன்றி இருப்பது அவர்களின் பொருளாதார நிலைமைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வயது ஏறி வருவதாகவும்,குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 நிறைவு செய்த அனைத்து டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் விரைவாக நியமனம் வழங்க கல்வி அமைச்சர் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. தேவையெனில் நிபந்தனையுடன் பட்டப்படிப்புக்கான தேவையை பூர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். 


இவ்விடயம் தொடர்பாக சாதகமான தீர்வு கிடைக்கும் என பட்டதாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 


பிரதான ரயில் போக்குவரத்து மார்க்கத்தில் ரயில் தாமதங்கள் நிலவுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


அலவ்வ மற்றும் ரம்புக்கனை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்த , ரயிலில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த பாதையிலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்தத் தாமதம் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைச் சீர்செய்யும் வகையில், ரயில்வே திணைக்களம் திருத்தப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.


 

​உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் மற்றும் தீர்மானங்கள், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மிகத்தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும்.

​பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க சூழலானது, நீதித்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றது.


சீன அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை நீதித்துறை நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய  கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.


"The decisions rendered within the Supreme Court Complex reflect the strength of justice, democracy, and the rule of law in the country. A safe and efficient environment further reinforces the independence and dignity of the judiciary"


While participating in the opening of the Supreme Court Complex, which was renovated with the assistance of the Government of China, for judicial activities..


#HariniAmarasuriya #PrimeMinister

 


திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சருமான  கெளரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களின் அன்புத்தாயாரும், பிரபல வைத்தியர் ஹேமச்சந்திரா குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. ஜீவாந்தினி ஹேமச்சந்திரா அவர்கள் இன்று காலமானார். 


அன்னாரின் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பி.ப 2.00 மணிக்கு திருகோணமலையில் இடம்பெறும்.


#Trincovoice #arunhemachandra

 


ஆண்டின் சிறந்த விவரண கட்டுரை எழுத்தாளருக்கான “உபாலி விஜேவர்தன விருது” ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு

ஆண்டின் சிறந்த விவரண கட்டுரை எழுத்தாளருக்கான “உபாலி விஜேவர்தன சிறப்பு விருது”வை, தமிழன் பத்திரிகைக்காக பிரபல ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் அவர்கள் பெற்றுள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) மற்றும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து கொழும்பு மவுண்ட் லவனியா ஹோட்டலில் நடத்திய 26 வது Journalism Awards - 2024  ஊடக விருது வழங்கும் வைபவத்தில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


தமிழ் ஊடகத் துறையில் தனித்துவமான எழுத்து நடையும், ஆழமான ஆய்வும், சமூக உணர்வும் இணைந்த விபரணக் கட்டுரைகள் மூலம் அவர் தொடர்ச்சியாக வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமகால சமூக, அரசியல், பொருளாதார விடயங்களை மக்கள் புரியும் வகையில் தெளிவாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்தும் அவரது எழுத்தாற்றல், இந்த விருதுக்கான தேர்வில் முக்கிய காரணியாக அமைந்தது.

உண்மை, நியாயம், மக்கள் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் அவரது கட்டுரைகள், தமிழ் ஊடகப் பரப்பில் கருத்துச் சிந்தனையைத் தூண்டும் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாகவும், பொதுமக்களின் பிரச்சினைகளை அதிகார மையங்களுக்குத் தைரியமாக எடுத்துச் செல்லும் ஊடகமாகவும் அவரது எழுத்துக்கள் விளங்குகின்றன.

“உபாலி விஜேவர்தன விருது” என்பது, இலங்கையின் ஊடகத் துறையில் தரமான விபரணக் கட்டுரைகளுக்கு வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க தேசிய விருதாகும். அந்த விருதைப் பெறுவதன் மூலம், நூருல் ஹுதா உமர் அவர்களின் நீண்டகால ஊடகச் சேவையும், அயராத உழைப்பும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச அளவில் கௌரவங்களையும், விருதுகளையும் பெற்றுள்ள இவர் ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி எழுத்தாளர், கவிஞர், அறிவிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவராவார்.

 


டித்வா புயலால் புத்தளத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழு இன்று(18) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது..

#HariniAmarasooriya #primeminister #News1st #SriLanka #lka

 (வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா - கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் .

கல்முனை கனடா பிராந்திய இணைய நிறுவனத்தினர் அந்த மக்களுக்கு சாரி மற்றும் பொங்கல் பானை அகப்பை உள்ளிட்ட உள்ளீடுகளை 
தாயக இணைப்பாளர் என். சௌவியதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எஸ். சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கழுகொல்ல சமூக செயற்பாட்டாளர் நந்தினி தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் 21 பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தாய்மாருக்கு இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டது.

 


ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு 

கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக  பாதிப்பு -தூர இட நோயாளர்கள் திரும்பிச் சென்றனர்


ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு 


அரச வைத்திய  அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன 

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரே ஒரு போதனை வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிகள் இடம்பெறாமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் 


தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதை அவதானிக்க முடிந்தது 


குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சனி தெரிவித்தார் .


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரிய குறித்த வேலை நிறுத்தம் இடம் பறுவதாக தெரிவிக்கப்படுகிறது

 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்         

 21ஆம் திகதி இடம்பெறும் அரசுக்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் கட்சி தலைமையினால் எடுக்கப்படவில்லை. இருப்பினும் கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு செயற்படுவோம் என என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் தெரிவித்தார்.
பொத்துவில் கோமாரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம் பெற்ற அம்பாரை மாவட்ட ஊடகவியலயாளர் போரத்தின் கூட்டமொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட மலையக மக்களுக்கான சம்பள உயர்வை வரவேற்றுகின்றோம். இன்னும் அதிகமாக வழங்குவதில் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்களுக்கான உரிமை மற்றும் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எனும் ரீதியில் எனது கோரிக்கையாகவும் இருக்கின்றது
இதேநேரம் மலையகத்தில் உள்ள 5 தனியார் தோட்டக்கம்பனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரச நிதியில் இருந்து சம்பள அதிகரிப்பை வழங்க முடியுமா எனும் கேள்வி எழுந்தமைதான் அங்கு சர்சையாக எழுந்துள்ளது. ஆனாலும் அவர்களது சம்பள உயர்வு வீட்டு வசதி சுகாதார வசதி வழங்கப்பட்டால் அதனை நாம் வரவேற்பதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்போம்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலயாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற ஒன்று கூடலில் கலந்து கொண்ட அவர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினரும் ஊடகவியலாளரும் பிரதான சுகாதாரப்பரிசோதகராக 35 வருடத்திற்கும் மேல் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற அப்துல் மலீக் அவர்களுக்கு; நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இதேநேரம் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் முன்னின்று செயற்படவுள்ளதாகவும் உறுதி அளித்தார்.
நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

 


அக்கரைப்பற்று -கல்முனை  பிரதான வீதியில் இன்று மாலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பிரதான வீதியில் பின்னால் வந்த கென்ரர் ரக வாகனம் முன்னால் சென்ற வேனில் பின் பகுதியில் மோதியது. தெய்வாதீனமாக அதிலிருந்த குழந்தையும் பெண்ணும் உயிர் தப்பினர். குறித்த வேன், தனக்கு முன் எதிரே சென்ற  வெசல் ரக காரில் மோதுண்டது. இதனால், குறித்த காரின் பின் பகுதியும் சேதமடைந்தது.






நாடு முழுவதும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


இன்று (21) பாராளுமன்றத்தில் எழுப்புய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகக் கூறினார். 

மேல் மாகாணத்தில் 4,630, தென் மாகாணத்தில் 2,513, மத்திய மாகாணத்தில் 6,318, வடமேல் மாகாணத்தில் 2,990, ஊவா மாகாணத்தில் 2,780, வடமத்திய மாகாணத்தில் 1,568, கிழக்கு மாகாணத்தில் 6,613, சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 மற்றும் வடக்கு மாகாணத்தில் 3,271 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

இதற்காக, நாடு முழுவதும் உள்ள தேசியப் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் மற்றும் 13 ஆண்டு தொடர்ச்சியான பாடங்களுடன், க.பொ.த உயர்தர சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல வெற்றிடங்களுக்காக 28.07.2024 முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. 

ஆசிரியர் சேவையின் தரம் 3 (ஆ) 1 தரத்தை சேர்ந்த பொறுப்பேற்காத 353 பட்டதாரிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். 

மேலும், ஆசிரியர் சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களை நிரப்ப பிரதமரின் செயலாளரின் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அந்த வெற்றிடங்களை விரைவில் நிரப்ப தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


இச் சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு  தனது பிறந்த நாளில்  50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய  இளம் தொழிலதிபர்


பாறுக் ஷிஹான்


9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர்  சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு  பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தார்.



புதன்கிழமை(15) இரவு கல்முனை மாப்பிள்ளை விருந்து தனியார் விடுதியில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  லசந்த களு ஆராய்ச்சி  முன்னிலையில்  இக்காசோலை குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.


பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிக்கமைய இத்திட்டம் அவரது பிறந்த நாளான அன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்  இன்னும் ஆறு வருடங்களுக்கு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


குறித்த மாணவி அம்பாறை மாவட்டம் கல்மனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா   மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2024ம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி 9 ஏ சித்திகளை பெற்றவராவார்.


மேலும் குறித்த பாடசாலையில்   க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி ஒவ்வொரு வருடமும் 9 ஏ சித்தி பெறும் மாணவருக்கு 50 ஆயிரம் ரூபா பணப் பரிசு வழங்குவதாக எம்.எச்.கே.மார்க்கட்டிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் வாக்குறுதியளித்திருந்தார்.


குறித்த வாக்குறுதிக்கமைய 2024ம் ஆண்டில் நடைபெற்ற பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவி மெளலவி முகம்மது  நிஸ்பர் (ஹாமி) ஆசிரியரின்  புதல்வி பாத்திமா அனபா என்பவரிற்கு தனது பிறந்த நாளான அன்று  தான் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் மற்றும் ஆசிரியர்கள்  ஊடகவியலாளர்கள் உட்பட  மேலும் பலர் கலந்து கொண்டனர்.


மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியிலும்  முன்னேற்றத்திலும் இவ்வாறான உந்து சக்தியான வார்த்தைகள் இளம் சமூகத்தின் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எதுவித ஐயமுமில்லை என  பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் தெரிவித்தார்.


இத்திட்டம் 10 வருடங்களுக்கு செயற்படுத்தப்படும் திட்டம் என்பதுடன்   பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித்தினால்  வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில்  அவரது பிறந்த நாளில்  இடம்பற்ற நிகழ்வு நான்காவது வருடத்திற்குரியது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 



யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை , கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.

அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும், பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


 இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (5) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.


இந்தத் திட்டம் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நெடுந்தீவு வாழ் மக்கள் கொழும்பில் உள்ள அதே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.


தற்போது, தீவகத்தில் உள்ள மின்பிறப்பாக்கிக்கு எரிபொருளை கொண்டு செல்ல சுமார் ஏழு மணிநேரம் எடுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், புதிய எரிபொருள் நிரப்பும் நிலையம் செயற்படத் தொடங்கியவுடன், 45 நிமிடங்களுக்குள் எரிபொருளை வழங்கக்கூடிய வசதி கிடைக்குமெனவும் இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக பூர்த்தி செய்யப்படும் என்றும், முதல் கட்டத்திற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 50 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யுமென்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தேசிய மற்றும் மத ஒற்றுமைக்கு உறுதியளிக்கும் அரசாங்கத்தின் கீழான ஒருங்கிணைந்த முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை இந்த வளர்ச்சி குறிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். நயினாதீவு அம்மன் கோவில் வரை மக்கள் சமாதானமாகவும் ஒரே படகிலும் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய ஒரு காலத்தை இந்த நிர்வாகம் உருவாக்கியுள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 


வி.சுகிர்தகுமார் 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைய உலக குடியிருப்பாளர் வாரத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் 1000 வீடுகள் இன்று (05)திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 4 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஆலோசனைக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ் மற்றும் இணைப்பு செயலாளர் எஸ்.எம்.ஆரிப் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் ரதீஸ் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 10 இலட்சம் ஒதுக்கீடு மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிர்மாணக்கப்பட்ட பெறுதிமிக்க 4 வீடுகள் இதன்போது திறந்து வைக்கப்பட்டன.
திறப்பு விழாவின் பின்னர் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் குறித்த வீடமைப்பிற்காக உதவியினை புரிந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்ததுடன் இதுபோன்ற வீடற்ற மக்கள் இன்னும் வாழும் பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்காலத்திலும் வீட்டுத்திட்டங்களை வழங்கி ஏழை மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் இவ்வீட்டுத்திட்டத்தினை வழங்கிய அரசுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
இதன்போது வீட்டினை பெற்றுக்கொண்ட பயனாளி ஒருவரால் பிரதேச செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பு நிகழ்வாக அமைந்தது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.