யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்தில் குதித்தனர்.
இதன்போது நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணம்போது நான் வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர் நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்று பிரச்சினை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இருப்பினும் சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
(பு.கஜிந்தன்)
இலங்கை கடற்படை மற்றும் ராடார் கண்காணிப்பு மூலம் உள்ளூர் கடற்பரப்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீனவர்கள் கண்டறியப்படாததால், இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனுமதி மற்றும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், சர்வதேச கடற்பரப்பிலும் தேடுதல் மேற்கொள்ள தனியார் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் நேசிக்கிறது .. #அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சிவாஜி ஐயா வீட்டுக்கு இன்று சனிக்கிழமை சென்றுள்ளார்.
ஒரு #உண்மையை கூற வேண்டும் நேற்று #வெள்ளிக்கிழமை மாலை எனக்கு அமைச்சர் சந்திரசேகரன் தொலைபேசி எடுத்தார்.
#சிவாஜி அண்ணனுக்கு எப்படி முகநூல் போட்டுள்ள தொலைபேசி தொடர்பு எடுத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை நம்பர் ஏதேனும் மாற்றிவிட்டாரா என கேட்டார்.
அன்று மாலை #பார்த்தீபன் அண்ணா சென்று வந்ததை முகநூல் பார்த்தேன் தொடர்பு கொண்டு கேட்டேன் ஏன் சிவாஜி ஐயாவின் தொலைபேசி இயங்கவில்லை என.
#Charge இல்லை நான் சென்ற பின்னர் தான் போட்டுள்ளார் எடுங்கள் இயங்கும் என்றார்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் சக அரசில் வாதியின் #நோய் நிலை பற்றி கேள்வி உற்றதும் செல்ல வேண்டும் என்ற மனம் ஏற்பட்டது.
யாழில் #தமிழ் தேசியம் சார்ந்த பல அரசியல் வாதிகள் இன்னும் சிவாஜி ஐயாவை பார்க்க செல்லாத நிலையில் அரச கட்சி அமைச்சர் சென்றதை #கூறத்தான் வேண்டும்.
சிலர் பாராளுமன்றம் சென்றதால் கொழும்பில் நிக்கிறார்கள்.ஆனால் யாழில் நிப்பவர்கள்.
கட்சி வேறாக இருந்தாலும் #மனிதம் #நேசிக்கிறது.
#வாழ்த்துக்கள்..
சற்றுமுன் யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி 22 வயது இளைஞன் உயிரிழப்பு..!
இன்று (14) மாலை யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி #உயிரிழந்துள்ளார்.
யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது-22) என்ற இளைஞனே #உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் #சடலம் மீட்கப்பட்டு, சங்கானை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், #வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தினால் ஒரு இளம் #உயிர் பிரிந்திருப்பது அந்தப் பகுதிக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
#காலநிலை மாற்றங்களால் இடி மின்னல் தாக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளிகளில் வேலை செய்பவர்கள் மிகவும் #கவனமாக இருத்தல் வேண்டும்.
↪தயவு செய்து இதையும் கவனியுங்கள்👇
🛑இடிச் சத்தம் கேட்டவுடனேயே வயல் வேலைகளை நிறுத்திவிட்டு, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் செல்லுங்கள். "மின்னல் தூரத்தில் தானே இருக்கிறது" என அலட்சியமாக இருக்க வேண்டாம்.
🛑வயல்வெளிகளில் இருக்கும் மரத்தின் அடியில் தஞ்சம் புகுவது மிகவும் ஆபத்தானது. மின்னல் எப்போதும் உயர்ந்த பொருட்களைத் தான் முதலில் தாக்கும்.
🛑நீங்கள் பயன்படுத்தும் மண்வெட்டி, கத்தி அல்லது இதர இரும்பிலான விவசாயக் கருவிகளை உங்களை விட்டுத் தள்ளி வைத்துவிடுங்கள். இவை மின்னலை ஈர்க்கும் கடத்திகளாகச் செயல்படும்.
🛑தயவு செய்து மின்னல் தாக்கத்தின் போது வயல்வெளிகள், வீதி அல்லது திறந்த வெளிகளில் நின்று கொண்டு தொலைபேசி பேசுவது #உயிருக்கு ஆபத்தை தரலாம்.
🛑பாதுகாப்பான கட்டிடம் எதுவும் அருகில் இல்லையென்றால், திறந்தவெளியில் தரையில் படுக்க வேண்டாம். மாறாக, கால்களைச் சேர்த்தபடி அமர்ந்து, தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்துக்கொள்ளுங்கள். தரையுடன் உங்கள் உடல் படும் பரப்பளவு மிகக் குறைவாக இருக்க வேண்டும்.
🛑வயலில் தேங்கியிருக்கும் தண்ணீர் அல்லது வாய்க்கால்களுக்கு அருகில் நிற்பது ஆபத்தை விளைவிக்கும்.
🛑வயல் வேலைக்குச் செல்லும் முன் வானிலை அறிக்கைகளைக் கவனியுங்கள். கருமேகங்கள் சூழத் தொடங்கினால் பாதுகாப்பான இடத்திற்கு நகரத் தயாராகுங்கள்.
"வேலையை விட உயிர் மேலானது. இடி மின்னல் நேரத்தில் திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்கவும்."
#Jaffna #LightningAlert #SafetyAwareness #VanniNews #யாழ்ப்பாணம் #மின்னல்எச்சரிக்கை #விழிப்புணர்வு #மின்னல் #SriLankaTamilNews #RIP
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை காட்டி அங்குள்ளவர்களை மிரட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், கருத்துச் சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
நூல்கள் மீதான தடை நீக்கப்பட்டு, எழுத்தாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
வட மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் ஆலயம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு
மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராக வும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை(10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.
சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் சடலத்தை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார்.
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்ததாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.
அவரது பதவி விலகலை, நீதி சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை, அடுத்து , நேற்றைய தினம் புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி, மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு விஜயம் செய்த நிலையில், நீதவானின் சமாதான அறை மற்றும் நீதிமன்றத்தில் நீதவானின் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என்பன மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதவான், நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.
நீதிச்சேவை ஆணைக்குழுவினால், மல்லாகம் மேலதிக நீதிபதிக்கு எதிரக நேற்றைய தினம் 23.9.2025 அன்று விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இதனடிப்படையில், மல்லாகம் மேலதிக நீதவான் இராஜினாமாச் செய்ததாகக தெரியவருகின்றது.
0
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்:
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியரும் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பேராசிரியரின் அறிக்கையில், ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட பின்னர் குறைந்தது எட்டு வாரங்களுக்கு மேலதிக அகழ்வுப் பணிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இதனடிப்படையில், நான் இரு தடவைகள் அகழ்வு இடத்திற்குச் சென்று மேற்பார்வை செய்தேன். இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையில் சில முக்கிய விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையின் கீழ் நடைபெறுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் இதற்கென தனியான சட்ட ஏற்பாடுகள் இல்லை. உடல் கண்டெடுக்கப்பட்டால், அது உடனடியாக மரண விசாரணையாக மாற்றப்படுகிறது. மரண விசாரணையின் முதன்மை நோக்கம், கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவதாகும். எனவே, அகழ்வுப் பணிகளுடன், உடல்களை அடையாளப்படுத்துவது எவ்வாறு என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. சட்ட வைத்திய அதிகாரி, இப்பணிகளில் நிபுணத்துவம் இல்லை என்று ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதாக முறைப்பாடு செய்தார். இது தொடர்பாக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இலங்கையில் அகழ்வுப் பணிகளுக்கு நிபுணத்துவம் இருந்தாலும், உடல்களை அடையாளப்படுத்துவதற்கு உரிய நிபுணத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.உதாரணமாக, 1999இல் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகள் முதலில் இந்தியாவின் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால், அங்கு நிபுணத்துவம் இல்லாததால், அவை திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது அவை இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிகிறோம். 1999இல் மரண தண்டனைக் கைதியான சோமரட்ன ராஜபக்ச, மேல் நீதிமன்றத்தில் அளித்த கூற்றின் அடிப்படையில் செம்மணியில் அகழ்வு நடத்தப்பட்டது. அவர் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது 15 எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. தற்போது, 150 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ராஜபக்ச குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ளதால், அவரது கூற்று உண்மையாக இருக்கலாம் என்பது தற்போது நிரூபணமாகிறது. செம்மணி விவகாரம் தொடர்பாக B2899 என்ற வழக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சிலர் விடுவிக்கப்பட்டு, ஐவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவ்வழக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கை மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நான் கோரியுள்ளேன். இதனைப் பரிசீலித்து, இரு வழக்குகளும் தொடர்புடையதாக இருப்பின், மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 1999இல் செம்மணி பகுதியில் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து, கலாநிதி தெவநேசன் நேசையா தலைமையில் மூவர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு, 2003 ஒக்டோபர் 28இல் 210 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கையில், அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்ப்பாண நகரம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு படைத்தரப்பினர் பொறுப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள், முகாம்களின் பொறுப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை அறிக்கையில் உள்ளன. இவ்வறிக்கையின் பிரதியை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இவ்விடயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதால், உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளேன். இதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழமையாக, மரண விசாரணை முடிந்த பின்னரே குற்றப் புலனாய்வு ஆரம்பிக்கப்படும். ஆனால், பொலிஸ்மா அதிபரின் கோரிக்கையின் பேரில், இதற்கு இணையாக புலனாய்வு நடத்தப்படுகிறது. இன்று, சட்டத்தரணிகளான மணிவண்ணன், குருபரன் மற்றும் நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் அளிக்க வந்தவர்களை பயமுறுத்தியதாக முறைப்பாடு செய்தோம். இதனையடுத்து, வாக்குமூலங்கள் பகிரங்கமாக, அனைவரும் காணக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். நான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இவ்விசாரணையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தேன். மேலும், சான்றுப் பொருட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும்போது, அவை உரிய மேற்பார்வையுடன் கையாளப்பட வேண்டும் எனவும், இதற்கு அனுபவமிக்க ஆய்வகங்கள் தேவை எனவும் வலியுறுத்தினேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாகவும், தேவையான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஆனால், இவ்வாறு புதிதாக அமைக்கப்படும் ஆய்வகத்தில் இப்பரிசோதனைகளை மேற்கொள்வது உகந்ததல்ல என நான் குறிப்பிட்டேன். அனுபவமும் நிபுணத்துவமும் உள்ள ஆய்வகங்களே இதற்கு பொருத்தமானவை என வாதிட்டேன். எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20ஆம் திகதி அகழ்வு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, 22ஆம் திகதி மீண்டும் பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-