Showing posts with label Akkaraipattu. Show all posts



( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு களைகட்டி வருகிறது.

பகல் இரவு பூஜைகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இன்று (8) ஞாயிற்றுக்கிழமை பகல் பூஜை ஆயிரக்கணக்கான அடியார்களுடன் இறுதி நாள் பச்சை கட்டலுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நாளை திங்கட்கிழமை (9) மடிப்பிச்சை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலயத்தில் நெல்குற்றி பொங்கலிடுவது வழமையாகும்.

நாளை மறுநாள் (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திருக்குளிர்த்தி பாடல் இடம்பெறும்.

 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


இலங்கை முஸ்லிங்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (07)சனிக்கிழமை கொண்டாடுகின்றனர். 


இதுஇதற்கமைய கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகல்முனை கடற்கரை வீதி ஹுதா திடலில் இன்று (07) இடம்பெற்றது. 

 பெருநாள் தொழுகையும்,குத்பா பேருரையினையும் மெளலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,ரியாதி) நிகழ்த்தினார். இதில் பெரும் அளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்

 


Rep/Faslin-KKY.

விபத்தில் 21 வயதுடைய காத்தான்குடி அப்துல்லாஹ் அகாலமரணம் 


மட்டக்களப்பு, ஆரையம்பதி, 5ம் கட்டையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச்சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு. மற்றொருவருக்கு காயம்


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டையில் நேற்றிரவு 10.10 மணியளவில் விபத்துச் சம்பவமொன்று சம்பவித்திருக்கிறது. 


இவ்விபத்தில் புதிய காத்தான்குடி -06, இராசா ஆலிம் வீதி, அல் அமீன் வீதி, (தோணா சந்தி) என்னும் முகவரியைச்சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் (21 வயது) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞன் பிரபல சிங்கப்பூர் டெக்ஸ் உரிமையாளரான பிரபல வர்த்தகரான காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அவர்களின் புதல்வராவார்.


இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.


 மட்டக்களப்பு, கல்முனை சாலை வழியே நேற்றிரவு 10.10 மணியளவில் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த வேனும் மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையை அண்மித்த பகுதியால் பயணிக்கும் போதே நேரெதிர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


குறித்த விபத்தில் சிக்கிய வேன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாடசாலை ஒன்றினது மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் என தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் காத்தான்குடியைச்சேர்ந்த இளைஞர்கள் இருவர் பயணம் செய்துள்ளதுடன், அவர்களில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கடோ கபு

#


Rep/Jahaan

அக்கரைப்பற்று கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இன்று இரவு எட்டு முப்பது அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது முச்சக்கர வண்டிகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வடிவில் மோட்டார் சைக்கிளில் மோதியதால் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார் முச்சக்கர வண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது  

 


கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


மழை நிலைமை:


திருகோணமலையில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


காற்று :


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கடல் நிலை:


கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்


அனுராதபுரம் - அடிக்கடி மழை பெய்யும்


மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்


கொழும்பு - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


காலி - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்


கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்


நுவரெலியா - அடிக்கடி மழை பெய்யும்


இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


திருகோணமலை - அடிக்கடி மழை பெய்யும்


மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.