சுவிஸ் பஸ் விபத்தில் இலங்கையர் பலர் காயம்



சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
40 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்,  சூரிச்சின் வட பகுதியில், அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கனரக வாகனங்களுடன் மோதியுள்ளதாக சூரிச் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.