பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி ! தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்!



 


பிரதமர் ரணில்  விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆர்பாட்டம் இன்றைய தினம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த 74 வருடங்களாக மக்களை ஏமாற்றி வரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உடனடியாக அரசியிலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.