தாதியர் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்நிலைக்கு வரக் காரணம் உங்கள் சேவையே!



 


தந்தையின் உணர்வுடன் பெருமை கொள்கின்றேன். என்றார்.


அனைவரினதும் மனங்களில் சேவையாற்றும் உணர்வை மிக நுட்பமாக பதியவைத்ததுடன்,
தனது ஆரம்ப கால சேவையில் அதாவது 25 வருடங்கள் முந்திய நினைவுப்பதிவுகளில் கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றிய இரு தாதியர்களின் 
குணாம்சங்களை தத்துருபமாக விவரித்து அனைவரும் மனம் நெகிழும் வகையிலும்.
காலம் கடந்தாலும் சேவை எவ்வாறு பேசும் என்று கூறி அனைவரின் மனங்களிலும் ஓர் கடமையுணர்வை விதைத்து விடைபெற்றார்.

விசேட அதிதி. அதிபர் ஹிமாலி பீரிஸ் பேசுகையில், தாதியத்தின் கடமைகளையும், வேறுபாடுகள், வளர்சிகள் பற்றி மிக
நுட்பமாக எடுத்துரைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தியதுடன், கல்முனை ஆதார வைத்தியசாலையின்  தாதியர் பெருமை,  வைத்தியசாலையின் அழகு,  பொதுவான சேவை, உள்வெளி சுற்றுப்புற சூழலின் தோற்றத்தை பாராட்டியதுடன், அதனால் நோயாளர்கள் பெறும் உணர்வையும் எளிமையாக வெளிப்படுத்தினார்.