(பாறுக் ஷிஹான்)
காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியை சேர்ந்த பாக்கியராசா கிருபாகரன் என்ற குடும்பஸ்தரே இன்று(3) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.மேலும் சடலமாக மீ ட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் கழுத்து மற்றும் தலை தோல்பட்டை உள்ளிட்ட பகுதில் காயங்கள் காணப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment