செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது
களுவாஞ்சிக்குடி நீதிமன்ற பதில் பதிவாளர், களுவாஞ்சிகுடி பொலிசாரால் . நீதிமன்ற காப்பகத்திலிருந்த சுமார் 1 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனதை அடுத்து 20.11.2025 அன்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
குறிப்பிட்ட நகைகள் அனைத்தும் வழக்குகளுடன் தொடர்புடையாதாகும். குறிப்பிட்ட நகைகள் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து காணாமல் போயிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த சந்தேக நபரான பதில் பதிவாளரின் சொந்த ஊரான வாழைச்சேனைக்கும் சென்று களுவாஞ்சிக்குடி பொலிசார் இன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.
விசாரணைகளின் பின்னர், இவர் இன்று மாலை களுவாஞ்சிக்குடி கௌரவ நீதிபதி திரு.பிரதிபன் முன்னிலையில், களுவாஞ்சிக்குடி பொலிசாரால், ஆஜர் படுத்திய வேளையில் குறித்த பதிவாளரை டிசம்பர் மாதம் 5 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற கௌரவ நீதிபதி இன்று கட்டளை பிறபிப்பித்தார்.
.jpg)

Post a Comment
Post a Comment