நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சர்வமதத் தலைவர்கள் நாளை ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகையை நோக்கி பாதயாத்திரையொன்றை நடத்தவுள்ளனர்.
நாளைக் காலை 9 மணியளவில் மகசின் சிறைச்சாலை முன்றலில் ஒன்றுகூடும் சர்வ மதத்தலைவர்கள் அங்குள்ள சிறைக்கைதிகளை நேரில் சந்திக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளடங்கிய மகஜருடன் ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளனர்.
தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு இந்தப் பாதயாத்திரை ஏற்பாடு செய்துள்ளது.

