அம்பாறையில் திடீரென தீப்பற்றிய கார், மோட்டார் சைக்கிள்



அம்பாறையில் கடையொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பற்றியுள்ளது. 

பொலிஸார் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இதனால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. 

அத்துடன் குறித்த வர்த்தக நிலையத்துக்கும் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும் தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.