போதை பொருள் ஒழிப்பு ஊர்வலமும் வீதி நாடகமும்


(க.கிஷாந்தன்)
போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமான வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களின் ஊர்வலமும் வீதி நாடகமும் 01.07.2019 அன்று நானுஓயா பகுதியை சேர்ந்த  தமிழ், சிங்கள மாணவர்களால் நானுஓயா நகரில் முன்னெடுக்கப்பட்டது.
நானுஓயா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான பாதாதைகளை ஏந்தி நகரில் ஊர்வலமாகசென்றதுடன். நகரில் வீதி நாடகமும் இடம்பெற்றது.
போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் அல்லது பாதிப்புகள் அதனை தடை செய்வதற்கு மாணவர்கள்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் இந்த வீதி நாடகம் மூலமாக சமூகத்திற்கு தெளிவுபட்டப்பட்டது.
போதை பொருட்களை பயன்படுத்துவதால் பெருந்தோட்ட மக்கள் எவ்வாறான சமூக, பொருளாதார, சுகாதார பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் இங்கு தெளிவுப்படுத்தப்பட்டது.