முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்


சீனாவின் இந்த ஷின்ஜியாங் மாகாணத்தில்தான் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நடப்பதாக தொடர்ந்து பல்வேறு நாடுகளால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

சமீபத்தில், இந்த மாகாணத்தில் உள்ள வீகர் இன முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் சீன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை நடத்தப்பட்டதாக சீனா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

அதேவேளையில், ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படவில்லை என சீனா மறுத்து வருகிறது.

எந்தவொரு மதமோ இனவாத குழுவோ இலக்கு வைக்கப்படுவதாக கூறப்படுவதையும் சீனா மறுத்தது.

அண்மைக் காலமாக மறுகல்வி முகாம்களில் பல லட்சம் மக்களை சீன அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தைத் தடுக்க அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.