Showing posts with label eas. Show all posts



( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை  ஒளிரும் கரங்கள் (Rising Hands) நிறுவனத்தினுடாக  தொழில் பயிற்சியை மேற்கொள்ளும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும்  அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு  மியானி (Miyani ) நிலையத்தில் நேற்று  நடைபெற்றது.

நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.இளையராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர்  எஸ். சந்திரகுமார்  மற்றும்  அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி  எல். சுபாஷ்கரன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும்  நிகழ்வுகளை  மட்டக்களப்பு விவேகானந்தா தொழிநுட்பக்கல்லூரி வளவாளர்கள்  மேற்கொண்டனர்.

 இந்நிகழ்வில்  சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும்,  அவர்களது பெற்றோர்களும்  கலந்துகொண்டதுடன்  தங்களது தொழில்  பயிற்சி சார்ந்த விடயங்களை செயன்முறை மூலமாக நிலையத்திற்கு வெளியே சுற்றுலா சென்று கற்றுக்கொள்ளக்கூடியதாக இச் செயலமர்வு அமைந்திருந்தது சிறப்பம்சமாகும்.

சாய்ந்தமருதில் பலவீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு.!!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (11) திங்கட்கிழமை இடம்பெற்றது.


சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.


இதன் போது சாய்ந்தமருது தண்டயல் வீதி, பலாஹ் பள்ளி வீதி, தோணா ஈஸ்ட் (East) வீதி, போக்கடி குறுக்கு வீதி ஆகிய வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரஜா சக்தி தவிசாளர்கள், உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள், பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் பெரும் பங்களிப்பாக அமையும் எனவும் ஆதம்பாவா எம்.பி.க்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

 


நூருல் ஹுதா உமர்


இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் “அகன்று செல்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, போதைப்பொருள்களிலிருந்து மக்களை அகற்றி பாதுகாக்கும் நோக்கில் சாய்ந்தமருதில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த நடைபயண செயற்பாடு இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாகக் கொண்டு, போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், “போதைப்பொருட்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு” என்ற செய்தியை பொதுமக்களிடையே பரப்பும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.