'வாட்சாப் செயலி” கட்டுப்படுத்தப்படுகின்றது



 "இந்தியாவில் 'வாட்சாப் செயலி, மத்தியில் ஆளும் பாஜக அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது' என்று அமெரிக்காவின் 'டைம்' பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் 'வாட்சாப்'பின் மூத்த நிர்வாகி சிவநாத் துக்ரால், ஆளும் பாஜகவின் தடையில்லா பக்தர், அவர் தொழில் முறை நடத்தையில் பாரபட்சமாக நடந்து கொண்டு உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பிரச்சனையை இப்போது காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பவன் கெரா, பிரவிண் சக்கரவர்த்தி ஆகியோர், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது, "ஒரு அரசியல் கட்சியால் (பாஜக) மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகிற வாட்சாப்பை 40 கோடி இந்தியர்கள் நம்ப முடியுமா? வாட்சாப்பை பயன்படுத்தும் 40 கோடி இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்கள், பரிமாற்ற விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை பா.ஜ.க.வுடன் பகிரப்படவில்லை, தவறாக பயன்படுத்தப்படவிலலை என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?" என கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.