வீரர்கள் மோதலால் பரபரப்பு





 தனது தடாலடி ஆட்டத்தால் அணியின் வெற்றிக்கு வித்திட்ட அபிஷேக் சர்மா ஆட்டமிழந்து வெளியேறிய போது களத்தில் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின. நடப்பு சீசனில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும் போது வித்தியாசமாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திக்வேஷ் ராதி, இந்த முறையும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனது ஸ்டைலில் வழக்கமான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட, அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முடிவில், நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.