இந்திய மற்றும் இலங்கை ரோட்டரி கழகத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்




 



.சுகிர்தகுமார்            


 இந்திய மற்றும் இலங்கை ரோட்டரி கழகத்தினால் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் மற்றும் கல்வித்தேவையுடையோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கினை அடிப்படையாக கொண்டும் 10 துவிச்சக்கர வண்டிகள் கல்முனை ரோட்டரி கழகத்தினால் இன்று  பொத்துவில் மெதடிஷ்த தமிழ் கலவன் மகா வித்தியாலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் 2400 துவிச்சக்கர வண்டிகள் இந்திய மற்றும் இலங்கை ரோட்டரி கழகத்தின் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 கல்முனை ரோட்டரி கழகத்தின் தலைவர் ரோட்டரியன் பொறியியலாளர் ரதீஷன் தலைமையில் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் அங்கத்தவர்களான தரணிதரன் அமிர்தசங்கர் சுபராஜன் பார்த்தீபன் சசிதரன் ரவிச்சந்திரன் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களால் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இத்திட்டத்தி;ன் ஊடாக முதற்கட்டமாக பொத்துவில் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் மகா வித்தியாலயம், தாண்டியடி மகா வித்தாயலயம் மற்றும் கோளவில் மகா வித்யாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு எதிர்வரும் காலத்திலும் இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.