அக்கரைப்பற்று புத்தகக் காட்சி இன்று கோலாகலமாக ஆரம்பிக்கிறது.



 


♦புத்தகக் காட்சி எங்கே நடக்கிறது? ♦எப்படி வருவது?
5 ஆவது அக்கரைப்பற்று புத்தகக் காட்சி இன்று கோலாகலமாக ஆரம்பிக்கிறது.
மாலை 4.00 மணிக்கு தொடக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
நீதிபதி பயாஸ் றஸாக் கௌரவ அதிதியாகவும், சமுத்ர புத்தகசாலையின் பணிப்பாளர் திருமதி சமுத்ரிகா டி சில்வா விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இன்று ஜூன் 10 ஆம் திகதி செவ்வாய் தொடக்கம் ஜூன் 15 ஞாயிறு வரை, 6 நாட்களாக இது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
தினமும் காலை 10.00 மணி முதல், இரவு 10.00 மணிவரை புத்தக விற்பனை நடக்கும்.
♦இடம்: நீர்ப் பூங்கா (Water Park)
அக்கரைப்பற்று பிரதான வீதியில் (Main Street) அரச அலுவலகங்கள் பல உள்ள இடத்திற்கு அருகிலேயே இது அமைந்துள்ளது.
✨Water Board, Telecom, DS Office, Zonal Director of Education (ZDE) Office ஆகியவற்றிற்கு அருகாமையில்...
✨Cargills Food City இற்கு முன்பாக...
பிரதான வீதியில் வந்திறங்கினால் நடை தூரம்.
அழகிய இயற்கைச் சூழல்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
✨நண்பர்கள், உறவினர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
✨வாசிப்பை வளர்ப்போம். புத்தகக் கலாச்சாரத்தைத் தூண்டுவோம்
✨நண்பர்களே புத்தகக் காட்சி பற்றி எழுதுங்கள்.
✨இது தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து உதவுங்கள்.
மிக்க அன்பும் நன்றியும்.
சிராஜ் மஷ்ஹூர்,
பிரதான ஏற்பாட்டாளர்,
அக்கரைப்பற்று புத்தகக் காட்சி,
10.06.2025