களை கட்டுகிறது,வைகாசிச் சடங்கு





( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு களைகட்டி வருகிறது.

பகல் இரவு பூஜைகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இன்று (8) ஞாயிற்றுக்கிழமை பகல் பூஜை ஆயிரக்கணக்கான அடியார்களுடன் இறுதி நாள் பச்சை கட்டலுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நாளை திங்கட்கிழமை (9) மடிப்பிச்சை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலயத்தில் நெல்குற்றி பொங்கலிடுவது வழமையாகும்.

நாளை மறுநாள் (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திருக்குளிர்த்தி பாடல் இடம்பெறும்.