தனி ஒருவன் 'ஹீரோ' திலக் வர்மா - ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியா



 


ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.

பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.

முதலில் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.

இந்தியாவின் வெற்றியின் நாயகனாக திலக் வர்மா 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார், சிவம் துபே 33 ரன்கள் எடுத்தார்.