"அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்"




"அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்" என்பது இந்த ஆண்டு உலக சிறுவர் தினத்திற்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் எந்தப் பின்னணி அல்லது சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் "அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்து" எந்தவொரு பிள்ளையையும் விட்டுவிடாமல், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் உளவியல் நல்வாழ்வை உறுதி செய்து, பிள்ளைகளுக்கு உகந்த சூழலில் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது எமது பொறுப்பாகும் என்கிறார் பிரதமர் 


ஒக்டோபர் 1 ஆம் திகதி இன்றுஅலரி மாளிகையில் நடைபெற்ற சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.