இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளை
அரசாங்கம் பாடசாலை நேர நீடிப்பை வாபஸ் பெற வேண்டும். இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க வேண்டி நேரிடும் என அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்து ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.
பொதுவாக நோக்கினால் பாடசாலை நேரத்தை அரை மணிநேரம்
அதிகரித்தால், முழு கட்டமைப்பிலும்
மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.
அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவும்
வேண்டும் என்பதே சகலரினதும்
எதிர்பார்ப்பாகும்.
அண்மையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சென்ற இடமெல்லாம் கல்வி சீர்திருத்தம் மற்றும் பாடசாலை நேர மாற்றம் தொடர்பிலேயே உரையாற்றியிருந்தார்.
குறிப்பாக பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் தோன்றவில்லை என் பிரதமர் கூறியிருந்தார். மறுகணம் தொழிற்சாலைகள் அதற்கு பதிலாக நாம் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலை ஆரோக்கியமான ஒன்றல்ல.
அரசும் தொழிற்சங்கங்களும் விடாக்கொண்டன் கொடாக்கண்டன் நிலையில் இருந்து விடுபட்டு இதற்கு நியாயமான தீர்வு காண வேண்டும்.
பாடசாலை என்பது தனி ஒரு கல்விச் சமூகத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. பல சமூகங்களுடன் தொடர்பு பட்டவை. கல்வி அமைச்சு போக்குவரத்து துறை மட்டுமல்ல குடும்பம் என்பதால் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்டது பாடசாலை ஆகும்.
நிலைமை ஏற்படும்.


Post a Comment
Post a Comment