வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா இன்று (30-12-2025 செவ்வாய்க்கிழமை), காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேச தேசியவாதக் கட்சியின் ஊடகப் பிரிவு அவரது மரணத்தை ஃபேஸ்புக் வாயிலாக அறிவித்தது.
"பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியா இன்று அதிகாலை 6 மணிக்கு, ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலமானார்," என்று வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 25-ஆம் தேதி லண்டனிலிருந்து டாக்கா திரும்பினார். அவர் திரும்பிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, கலீதா ஜியா தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.
பேகம் ஜியா 1991-ல் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரானார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர் 2006-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். பிஎன்பி கடந்த மூன்று தேர்தல்களைப் புறக்கணித்துள்ளது. 2024-ல் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்திற்கு கலீதா ஜியா ஆதரவளித்தார். பிஎன்பி தற்போது வங்கதேசத்தின் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, அடுத்த ஆண்டு தேர்தல்களில் அது ஆட்சிக்கு வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது


Post a Comment
Post a Comment