கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று



 


🛑#கந்தளாய் வைத்தியசாலைக்கு முன்னால் இருந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிகள் சேதம்!


இன்று 11 காலை இடம்பெற்றுள்ளது.


திருகோணமலை கந்தளாய் தள வைத்தியசாலைக்கு முன்பாக நின்றிருந்த ஒரு பாரிய மரம் திடீரென முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.


வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் நோக்கில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளே இவ்வாறு மரத்தின் கீழ் சிக்கி நசுங்கியுள்ளன.


அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் பாரிய காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என

தகவல்கள் தெரிவிக்கின்றன


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் நடத்தி வருகின்றனர்