கல்முனை பிரதான பஸ்தரிப்பிடத்திலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலிருந்து இந்த சடலம் சடலம் நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பெரிய கல்லாறு பகுதியைச் சேர்ந்த 45 வயதான தனியார் பஸ் நடத்துநர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

