பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் 5 பிக்குகள் விளக்கமறியலில்



ருஹுனு பல்கலைகழக கலை பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் பிக்குகள் சிலரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாத்தரை, எலிய கந்த பிக்குகள் விடுதியில் பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் 5 பிக்குகள் நேற்று (20) மாத்தரை பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை மீண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் 18 ஆம் திகதி இந்த பகிடிவதை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய பிக்குகளின் உயர் கல்வி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பகிடிவதை சட்டத்தின் கீழ் குறித்த பிக்குகளுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.