திருநெல்வேலி மரக்கறி வியாபாரிகள் பகிஸ்கரிப்பில்


#lka #Jaffna #Thirunelweli #market
நல்லூர் பிரதேச சபை ஊழியர்களுக்கும் வியாபாரிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திருநெல்வேலி மரக்கறி சந்தை வியாபாரிகள் பகிஸ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.
நடைபாதையில் வைக்கப்பட்ட விவசாயி ஒருவரின் மரக்கறி மூட்டையினை சபை ஊழியர்கள் அகற்ற முற்பட்ட வேளை ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மறு அறிவிப்பு வரை குறித்த வியாபாரி வியாபாரம் செய்யவேண்டாம் என சபையால் அறிவித்தல் ஒட்டப்பட்டது இதனால் இப் பகிஸ்கரிப்பு இடம் பெறுவதாகத் தெரிகின்றது.