மீனவர் அடையாள அட்டை




மீனவர் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத கொடுக்கல் வாங்கல், வெளிநாடுகளுக்கு செல்வது ஆகியவற்றை தடுப்பதற்காக அடையாள அட்டை மற்றும் அனைத்து மீன்பிடி வள்ளங்களுக்கும் ஜி பி எஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

கடற்தொழில் திணைக்கள பிரச்சனைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இதனை அமைச்சர் தெரிவித்தார். கடற்தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடற்தொழில் துறைமுகங்களில் இருந்து செல்லும் கடற்தொழிலாளர்களின் கைவிரல் இயந்திரத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்தப்பின்னர் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அவசர அறிவிப்பு காலநிலை அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கும் குறுந் தகவல்களை பரிமாறுவதற்கும் 2 மாத காலப்பகுதிக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர். 

இதற்கான பரிந்துரை 2019ம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடற்தொழிலாளர்களை வலுவூட்டுவதற்காக அமைச்சரவையின் மூலம் கடற்தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் கடன் உதவியின் வரையரையை அதிகரிப்பதற்கும் கடற்தொழிலுக்கான உபகரணங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராய்ச்சி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். 

அரச தகவல் திணைக்களம்