சந்திப்பு


வட மாகாணத்திற்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் எஸ். பாலசந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்களுயிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பொன்று வட மாகாண இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாந்த், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் குழந்தை ரவி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.