”கோட்டாபய இலங்கை பிரஜையாக ஏற்க முடியாது" விசாரணைத் தேதி வெளிவந்தது


இரண்டாம் இணைப்பு
கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது இணைப்பு
பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கக்கூடாது கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனு