ஐந்து பேரின் உயிரை காவுக் கொண்டது, மழை


சீரற்ற வானிலை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இடர் முகாமைத்துவ நிலையம் இன்றுகாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளது.
சீரற்ற வானிலையினால் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 3048 குடும்பங்களைச் சேர்ந்த 10823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் மேமலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலேயே உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.