பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
ஜனாசா நல்லடக்க விடயத்தை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க வேண்டும் எனவும் சுமந்திரன் ஐயா சாணக்கியன் ஞானசார தேரர் கூட ஜனாசா நல்லடக்க பின்னணியில் பாடுபட்டுள்ளதாக அம்பாறை மாவட்டத்தில் சுயேச்சை குழு -2 என்கிற பெயரில் போட்டியிட்ட அரசியல் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இன்று சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்தக்களை முன்வைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
அம்பாறை ஊடக அமையத்தில் இன்று சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்தக்களை முன்வைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
மேலும் ஒவ்வொரு சமூகத்திலும் வித விதமான மக்கள் உள்ளனர்.தமிழ் சமூகத்தை சேர்ந்த சுமந்திரன் ஐயா சாணக்கியன் ஆகியோர் ஜனாசா விடயத்தில் பாடுபட்டுள்ளனர்.அது தவிர சிங்கள சமூகத்தில் ஞானசார தேரர் கூட ஜனாசா நல்லடக்கத்திற்காக அங்கீகாரம் கொடுக்க பாடுபட்டவர்.அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.இது போன்று அநேகர் அடக்கம் செய்யப்படவேண்டும் என கூறிக்கொண்டு இருந்தனர்.உலக சுகாதார ஸ்தாபனமும் அடக்கம் செய்யவே கூறியது.எனவே இதனை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நிறுவ வேண்டும் .
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது தரமுயர்த்தும் விடயத்தில் அதற்கு பூரணமான அதிகாரம் வழங்க வேண்டும்.இது தவிர சாய்ந்தமருது நகர சபையும் வழங்க வேண்டும்.என்பதில் உறுதியாகவுள்ளேன்.இது தொடர்பில் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட உயிரை கொடுப்பேன் என கூறியுள்ளேன் என்றார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது தரமுயர்த்தும் விடயத்தில் அதற்கு பூரணமான அதிகாரம் வழங்க வேண்டும்.இது தவிர சாய்ந்தமருது நகர சபையும் வழங்க வேண்டும்.என்பதில் உறுதியாகவுள்ளேன்.இது தொடர்பில் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட உயிரை கொடுப்பேன் என கூறியுள்ளேன் என்றார்.
Post a Comment
Post a Comment