உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் . S.A.C.M. கலீல் மறைவு


 


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முன் பள்ளி அபிவிருத்திக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் . S.A.C.M. கலீல் அவர்கள் மட்டக்களப்பில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட வேளை வபாத் ஆனார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..
அன்னாரின் ஜனாசா தற்போது குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சமூக , மார்க்க , கல்வி , அபிவிருத்தி என அனைத்து விடயங்களிலும் தன்னை அர்ப்பணித்து ஊரிலே செயற்பட்ட ஒரு துடிப்பு மிக்க ஆளுமையை இழந்துள்ளோம்...
யா அல்லாஹ் , அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தினை பரிசளித்திட வேண்டும் எனவும் , அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நல்லதாக முடிவுற்று , அவரது இழப்பால் வாடும் உறவுகளது உள அமைதிக்காகவும் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.