ஒன்று கூடல்



 (சர்ஜுன் லாபீர்)


கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Sun Gloaming 2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று(11) காலை 9.30  மணியளவில்  கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் மருதமுனை கலாசார மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்று சென்ற  மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவித்து நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்தோடு கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாருமான ஏ.எச்.அன்சார் கலந்து கொண்டு சிறப்பித்தார்

மேலும்  விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ்,அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எல் ஆதம்பாவா, நிந்தவூர் பிரதேச செயலாளரும் முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளருமான சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசீக்,இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஷ்ஷான்(நளிமி), பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்
எஸ் சகுதுல்.நஜீம்,கல்முனை மாநகர பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அசீம், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஜெசான் ஆசீக்,,மகா ஓயா உதவி பிரதேச செயலாளர் ஐமா நிஹ்மத்துல்லாஹ், உட்பட இன்னும் பல உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்