#இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்.
யாழ்ப்பாணம் கண்டி வீதியினைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி ரெமடியஸ் யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார். அண்மையில் நிகழ்ந்த விபத்தொன்றில் கடுங்காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இன்றைய தினம் இவரது உயிர் பிரிந்தது.
1967 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த முறியப்பு றெமிடியஸ், கொழும்பு பல்கலையில் சட்டம் பயின்று, சட்டத்தரணியானார்.இவர், மனித உரிமை செயற்பாட்டாளராகப் பரிணமித்ததுடன், சமூக சேவையில் தன்னை முழமையாக அர்பணித்ததுடன் , யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஆகவும் களப் பணி புரிந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரது உடலம் யாழ் கண்டி விதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக் கிரிகைகள் பின்னர் இடம்பெறும் என்பதாகத் தெரிய வருகின்றது
அவரது பிரிவால், துயரரும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்,
Post a Comment
Post a Comment