திருக்குறள் காட்டும் பனை மரம்!




 



“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்" என்ற திருக்குறளில், தினையளவு செய்யும் சிறு உதவியும் பனை அளவாக கொள்ளப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். பனையின் பெயர்களைக் கொண்ட திருப்பனந்தாள், திருப்பனங்காடு,


திருமணல்பாடி, திருக்குறுங்குடி, பனையூர் போன்ற பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்களில் பனை மரம் தலவிருட்சமாக உள்ளது.


தமிழர்களின் அடையாளமாக திகழும் பனை மரங்கள், தமிழர்கள் அதிகம் வாழ்ந்த இலங்கை, மொரீசியஸ், கம்போடியா, மலேசியா, இந்தோனேஷியா போன்ற பல்வேறு நாடுகளில் இன்றும் கம்பீரமாக உள்ளன.