தம்பிலுவில் களூதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி



 



தம்பிலுவில் களூதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி  உத்தர மஹோட்ச கொடியோற்றதுடன் ஆரம்பம்....!!!


ஜே.கே.யதுர்ஷன் ...


கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வங்க கடலோரம் ஆறுகளும் மரங்களூம் வயல் வெளிகளூம் சூழ் அழகிய கிராமமாம் தம்பிலுவில் கிராமத்தில் ஆற்றங்கரை யோரம் கிராம எல்லையில் தனிக்கோவில் கொண்டு வீற்றிருந்து நாடிவரும் தேடிவரும் அடியவர்களூக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகனாம் தம்பிலுவில் களூதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆணி உத்தர மஹோற்சவ கொடியோற்ற திருவிழா நேற்றைய 2025/06/23தினம் பஞ்ச பூதங்களின் ஆசிவாதத்துடன் மேளதாளங்கள் முழங்க விண்னைபிளக்கும் பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிக சிறப்பாக ஆரம்பமாகிய 15து நாட்கள் திரூவிழா கோலம் பூண்டூ 2025/07/01 வீதி உலா இடம்பெற்று  2025/07/02 திகதி தீர்த்த உட்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.....


ஆலய பூசை நிகழ்வுகள் யாவும் உட்சவ கால பிரதம குரு கலா பூசனம் சைவப்புலவர்,சைவ சித்தாண்ட பண்டிதர் சோதிடர் சிவஸ்ரீ.க.லோகநாதன் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் வ.பவாநந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது....