தங்காலை பரவிவெல்ல கடல் பரப்பில் படகு விபத்து





 தங்காலையில் உள்ள பரவிவெல்ல துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது.


விபத்து நடந்த நேரத்தில், மீன்பிடி படகில் 6 மீனவர்கள் இருந்தனர், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர். இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,


அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், பாறையில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் தங்காலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.