சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வுப் பரீட்சைக்கு தோற்றவுள்ள,அயான் அகாஷ் கௌரவிக்கப்பட்டார்



 



ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அயான் அகாஷ் கௌரவிப்பு


(எச்.எம்.எம்.பர்ஸான்)


தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றி சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வுப் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் அயான் அகாஷை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (4) இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவனுக்கு பூ மாலை அணிவித்து மலர் கொத்து வழங்கி பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


தனது திறமையினை வெளிப்படுத்திய மாணவனுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


ஒலிம்பியாட் போட்டியில் சாதனை படைத்துள்ள மாணவன் அயான் அகாஷ், எம்.எச்.எம்.பாஹிர், எம்.எச்.றிஸானா ஆசிரியை ஆகியோரின் புதல்வராவார்.