கிழக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழை வெள்ளப் பெருக்கினால் 45,387 குடும்பங்களைச் சேர்ந்த 144,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் 05 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்ததுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (07) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுரை 122 வீடுகள் முழுமையாகவும் 2,156 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருவர் உயிரிழந்ததுடன் 12,469 குடும்பங்களைச் சேர்ந்த 34,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் இதுரை 11 வீடுகள் முழுமையாகவும் 946 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடைதங்கல் முகாம்களும் மூடப்பட்டடு மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கின்றன.


Post a Comment
Post a Comment