மாகாண சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஊழல்



மாகாண சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அரசாங்கம் மட்டுமல்லாது தலைவர்களும் அதிருப்தி வௌியிட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு பின்னர் அதிக நிறைவேற்று அதிகாரம் கிடைக்கப் போவது உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் இந்த அதிகாரங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.