7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு


தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் “நவீன முகாமைத்துவ அணுகுமுறை ஊடாக பசுமை சுற்றுச் சூழலை மேம்படுத்தல்” எனும் தொனிப் பொருளில், 07ஆவதாக வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று (20) நடைபெற்றது.
பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம பேச்சாளராக இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கே.மாறன் கலந்துகொண்டார்.