இலங்கை மேல் நீதிமன்றுக்கு புதிய நீதிபதியாக எஸ் சதீஸ்கரன் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வினால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சாவகச்சேரி நீதிமன்றின் நீதிபதியாக ற செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதி எஸ். சதீஸ்தரன் அவர்கள் இன்று (மார்ச் 13, 2026) அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இவர் இலங்கை நீதிச் சேவையின் விசேட தர (Special Grade) அதிகாரி ஆவார்.
அரசியலமைப்பின் 111 (2) ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எஸ். சதீஸ்தரன் அவர்கள் இதற்கு முன்னர் யாழ்ப்பாண நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியாக நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#judgement #Judicial #followers


Post a Comment
Post a Comment