புகையிரதத்தில்,மோதி உயிரிழப்பு



வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்சன் வீதி, முகுது மாவத்தைக்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (27) இரவு 7.15 மணியளவில் வௌ்ளவத்தை பகுதியில் இருந்து தெஹிவல நோக்கி பயணித்த புகையிரதத்தில் 65 வயதுடைய ஒருவர் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித அடையாளங்களும் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை நேற்று மாலை 3.50 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்படை முகாமிற்கு அருகில் மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மொரட்டுவ பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ரங்கனா நவோதினி இனேஷா பெர்ணான்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சம்பவங்கள் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.