மாயமானது, துப்பாக்கிகள்


(கிசாந்தன்)
அக்கரப்பத்தனை காவல்துறையில் மாயமான துப்பாக்கிகள்


அக்கரப்பத்தனை காவல்துறை ஆயுத களஞ்சியசாலையில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலிய காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆம் திகதி அந்த காவல்துறை ஆயுத களஞ்சியசாலையில் இருந்து இவ்வாறு இரண்டு கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதோடு, அதற்கு பொறுப்பான காவல்துறை உத்தியோகத்தர் இது தொடர்பில் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்படி காணாமல் போயுள்ள கைத்துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.