பாலமுனையைச் சேர்ந்த லாபீர் விபத்தில் உயிரிழப்பு


வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாலமுனையைச் சேர்ந்த லாபீர் வபாத்
-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-
வெல்லவாய-வெல்லாவ எனும் பகுதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் காத்தான்குடி பாலமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம். லாபீர் (44) எனும் சகோதரர் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மீன் ஏற்றும் வாகனத்தை செலுத்தி சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெல்லவாய பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்: ரிபாஸ் மௌலவி (மருமகன்)