விசேட அமைச்சரவைக் கூட்டம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. அதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
கொழும்புக்கு வெளியில் இருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் கொழும்புக்கு அவசரமாக திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவசர அமைச்சரவையைக் கூட்டியதன் பிரதான நோக்க​ம் என்னவெனத் தெரியவில்லை.