சந்திரயான் 2: விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல்தொடர்பு துண்டிப்பு



இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத்தில் அதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் லேண்டரில் இருந்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்துவிட்டதாக அவர் கூறினார்.
இது குறித்த காரணங்களை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக சிவன் மேலும் கூறினார்.
சந்திர மேற்பரப்பில் இருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில், விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சிவன் மேலும் தெரிவித்தார்.