சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் மாநாட்டில் ஐ.தே.க அமைச்சர்கள்


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு  ஆரம்பமாகியுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் இந்த மாநாடு,  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம,  ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன,  முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பங்கேற்றுள்ளார்.