"துணைப் பிரதமரை நியமிப்பது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை"


 



துணைப் பிரதமரை நியமிப்பது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒரு துணைப் பிரதமரை நியமிக்க அரசாங்கத்திற்கு அதிகாரங்கள் உள்ளன என்று கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களைப் போல அரசியல் மயமாக்கப்பட்ட வேறு எந்த நிறுவனங்களும் இலங்கையில் இல்லை என்று ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.